பட்டணத்து பெண்ணே!!!!  

Posted by இலக்கியசெல்வன்

பட்டணம் ..............
என் படிப்பை வளரவைத்தது
தகுதியை வளர்க்க உதவியது
தரமான வேலைவாய்ப்பையும்
அமைத்து கொடுத்தது..

பத்தாண்டுகளில் உன்னின்
பலமுகத்தை பழக்கிக்கொண்டவன்
பட்டணத்துப்பெண்ணே .........
உன்அன்பினை மட்டும்
ஏற்க்க மறுக்கிறது மனம்..

தோழனாய் தோளுயர்ந்து
நிற்கின்றவன்....
காதலனாய் கரைந்துவிடுகிறேன்

மங்கையர்யெனில் மாறாத
குணநலன்கள் இவையென்று
பசுமரத்தானிபோல் பதிந்துவிட்டது.
அறிவுக்கு எட்டுகிறது
இந்தஉலகமாற்றம்
அதை உணர மறுக்கிறது
என் பிற்போக்கான மனம்,,

பிற்போக்கான சிந்தனை
என்னில் மட்டுமல்ல
என் சமுதாயத்திலும்..பரவிகிடக்கிறது
மாறும் நம்வருங்காலம்
என்றநம்பிக்கையில் ...
மாறமுயற்சிக்கிறேன்.

விடியலின் விந்தை !!  

Posted by இலக்கியசெல்வன்


எதிரொளியை தவிர
எதையும் காணமுடியவில்லை
எதிர்வீட்டு வாசலில்
தன்செந்கதிரால் பொலிவுட்ற்ற
மஞ்சள்புசிய அவள்திருமுகத்தை
மற்றவர்காண மறைக்கிறான்
காலைக்க்கதிரவன் !!!!!

உலராத கூந்தளுடன்
மஞ்சள் தாவணியில்
வாசலை வண்ணபடுத்த
வருபவளைக்காண போட்டி
எனக்கும் கதிரவனுக்கும்
விடிவதறக்குமுன் விழிக்கிறேன்
தினமும் .................
விந்தையை காண!!!!!!!

 

Posted by இலக்கியசெல்வன் in ,

பொழுதெல்லாம் பேசுவதாலோ
ஒன்றாக சுற்றுவதாலோ
உதவிகள் பல புரிவதாலோ
உண்மையான அன்பு பிறப்பதில்லை...

...நட்பானாலும் காதலானாலும்
எண்ணங்கள் இணையும்போது மட்டுமே
இதயங்கள் இணையும் அவ்விடத்தில்
உண்மையான அன்பு பிறக்கும்
அது நிலைக்கும்.!!!!!

இயல்பு ¡¡¡¡¡  

Posted by இலக்கியசெல்வன்

மறுக்கமுடியவில்லையடி ....
மனதில் ஓர் தடுமாற்றம்
மாற்றான் தோளில்
உன்தலை சாய்ந்தது கண்டு !!!!!!

அருகில் இருந்தவரை
அறியவில்லை..........
விலகிசென்றவுடன் என்னுள்
சில மாற்றங்கள்
அன்பை அபகரிக்க
அவன் வந்துவிட்டானோ என்று??????

இளகிய மனம்??????  

Posted by இலக்கியசெல்வன்

மங்கையர் கண்ணீரால்
மனம் இளகி
மனமில்லாமல்.....
மனம்ஒத்து பிரிகிறோம்
என்கிறது அவன்மனம்

இழிவுகள் பலதாங்கியும்
பழிச்சொல் சுமத்தியதில்லை
அந்த மனம்

கரைப்பார் கரைத்தால்
கல்லும் கரையும்
பெற்றவர்கள் மனம்மட்டும்
விதிவிளக்கோ????

முயற்சிகளே சிறிதும்
எடுக்காமல் ....
முடியாது அவர்களைமாற்ற
என்றுஎண்ணி மூவரின்
வாழ்வில் விளையாட
எண்ணுகிறது அவள்மனம்

ஆழமான அன்பினை
ஆடைபோல்........
மாற்றி செலுத்தவல்லது
அந்த மனம்.

தனிமை :(  

Posted by இலக்கியசெல்வன் in

பல்லாயிரம் மயில் தொலைவு
புதுபுது தகவல்தொடர்பு சாதனங்கள்
எத்தனை மணித்துளிகள் பேசினாலும்
என்னுள் ஏதோ குறை
எதையோ இழப்பது போல :(

கனவில் வந்து கன்னத்தில்
கொடுத்தாலும் ........... :)
உன் கடிதம் காணும்வரை
கலங்கியே நின்றன என்கண்கள்
உன் பிரிவினால்!!!!!!!

தூதுபோ !!!  

Posted by இலக்கியசெல்வன் in

உன்அருமை தெரியாமல்
உன்னை குடைவைத்து
மறைப்பதை போல
என்காதல் புரியாது
என்னைஅவள் வெறுக்கிறாள் ....

உன்பெருமை சொல்லபலருண்டு
என்அருமை உணர்த்த
எவருண்டு????????

தூதுபோ மழையே
இந்த தூயவனின்
காதலை உணர்த்த
பதிலோடு வருவாய்என
பணிவோடு காத்திருக்கிறேன் .

மாட்டுப்பொங்கல்  

Posted by இலக்கியசெல்வன் in

பத்துமாதம் சுமந்துபெற்றவனோ
பாதியில் விட்டுவிட்டான்
பட்டினியாக நடுத்தெருவில்........
பகுத்தறிவற்ற அவைகளோ
பசியாற்றுகின்றன.......
இந்தமுதியவர்களுக்கு!!!

பயணத்தின் பயன் :)  

Posted by இலக்கியசெல்வன் in

ஓடும்இரயிலில் ஒன்பதுமணிநேரம்
இருள்சூழ்ந்த இரயில்பெட்டியில்
பௌர்ணமியாய் ஒளித்திருந்த
உன்முகம் ரசித்ததிலிருந்து.....
உறங்காமல் பலஇரவுகள்
உன்நினைவால் வாடுகிறேன்

 

Posted by இலக்கியசெல்வன்

மழையில் நனைந்தபோது
மற்றவர்கள் பலர்நனைய
குடைக்குள்எனக்கு இடமளித்தவளே!!!

உணவு இடைவேளையில்
ஓயாத வேலையினால்
உணவை மறந்தபோது
பாதிவுணவளித்து பசியாற்றியவளே!!!!!

கல்லூரிக் கட்டணத்திற்காக
கால்கடுக்க நெடுவரிசையில்
நீண்டநேரம் நின்றபோது
குறிகிய பெண்வரிசையில்நின்று
கட்டணம் செலுத்துதவியவளே!!!!

பருவ தேர்வில்
திருதிருவென முழித்தபோது
தெளிவான உன்தாள் தெரிய
தோள் அசைத்து உதவியவளே!!!

வினையாமல் இவைஅனைத்தும்
இயல்பான வாழ்வில்
இன்றியமையாதவை
காரணங்கள் கண்டறிய
காலங்கள் பல காத்திருக்கிறேன்.

 

Posted by இலக்கியசெல்வன்


இழப்புக்கூட இனிமையானது
என்னவளிடம் என்னுடைய
இதயத்தை இழந்தபோது!!!!!

தவறு அறியா தவிக்கிறேன்??????  

Posted by இலக்கியசெல்வன் in


பிழை அறியாமனம் பித்தாகிவிடும்
பிரிவினைகூட ஏற்றுகொள்கிறேன் தண்டனையாக
மன்னித்துவிட்டாய் என்று மறைத்துவிடாதே
உன் மனதிற்க்குள்..........................
நான்செய்ததாக சொன்ன பிழையை!

ஒளிமயமான எதிர்காலம் ?????  

Posted by இலக்கியசெல்வன் in

ஆறுவயது சகோதரர்களின்
ஆக்ரோஷமான சண்டை
நடுத்தெருவில்
ஆசையுடன் அன்னை
அளித்த சிற்றுண்டிக்கல்ல
பொறுப்பற்ற தந்தை
போதையில் தொலைத்த
துண்டு பீடிக்கு!

மெய்பட காத்திருக்கிறேன்  

Posted by இலக்கியசெல்வன்


உன்னோடுசென்ற உயர்தரசைவ உணவகம்
ஒன்றாக நாம்ரசித்த திரைப்படம்
நண்பர்களுக்கு பயந்துநழுவி சென்று
பார்த்த மருதமலைமுருகன் தரிசனம்
கூட்டமாக சென்று மகிழ்ந்த
உன் பிறந்தநாள் விருந்து............
நினைவாக்காமல் சென்ற
என் கனவை
என்று நிறைவேற்ற போகிறாய் ??

சிலநொடி வார்த்தைகளோடு :-)  

Posted by இலக்கியசெல்வன் in


அன்றொருநாள் சென்றுவருகிறேன்
என்று அசைத்த
உன் விழிகளுக்காக
இன்றுவரை என்கண்கள்
உன்முகம் தேடுகிறது
இனிஅந்த அசைவுகள்
தொடராதோவென்று!!!!

திருமண அழைப்பிதழ்  

Posted by இலக்கியசெல்வன் in


நிமிடங்கள் சென்றன
வார்த்தைகள் நின்றன
கண்ணில் கண்ணீருடன்
மனதில் ஓர்பூகம்பம்...
மறைத்த காதலும்
மண்ணுக்குள் மறைந்தது
மணமக்களின் பெயர்கண்டு!!

தோழியாய் என் சிநேகிதியாய்!!!  

Posted by இலக்கியசெல்வன் in


அறியாத வயதில்
ஆறாம் வகுப்பில்
அழியாது தோன்றிய
ஆழமான அன்பே!

முதலில் தோன்றிய
முறியாத நட்பே!
சந்திக்க முடியாதென்று
சங்கடத்துடன் பிரிந்தோம்
அன்று பத்தாம்வகுப்பில்..



சகதியில் சிக்கிய பேருந்தில்
சாலை ஓரம் சென்றபோது
சிலநொடி வார்த்தைகளோடு
சிறகடித்து பறந்துவிட்டாய்!

சந்தர்ப்பங்கள் கிடைக்காதோவென்று
தவித்து கொண்டிருந்த நேரத்தில்
தெளிவான உன்முகம்
தெரிந்ததோர் புகைபடத்தில்
எல்லையற்ற மகிழ்ச்சியோடு
எல்லாவற்றையும் அறிந்துகொண்டேன்
உன் பள்ளி சிநேகிதநிடமிருந்து.

தொடர்புகொள்ள கிடைத்த
உன் தோழியின்...
தொலைபேசி எண்ணை
தொடர்ந்து முயற்சித்து................

மகளிர் விடுதியில் மங்கையர்கள்
மறைமுகமாக பயன்படுத்திய கைபேசியை
முப்பது நாட்களுக்கு பிறகு
முறையாக தொடர்புகொண்டு
மாறாத அந்த மழலைதன குரலை
மணிக்கணக்கில் மகிழ்ச்சியோடு ரசித்தேன்!

முக்கியமான அந்த கல்லூரிபருவத்தில்
முழுமையான உன் அன்பு
முறையாக என்னை வழிநடத்தி
முடிவில் தொலைந்து விட்டாய் !

ஏழாண்டுகளுக்கு பிறகு
எதிர்பாராமல் உன்முகத்தை
எதிரே கண்டபோது
கனவோ என்றுநினைத்து
கண்டுகொள்ளாமல் சென்றபோது
கைதட்டி அழைத்தகுரல்
கனவில்லை என்றுணர்த்தி
மகிழ்ச்சியில் மௌனமாய்
திகைத்துபோய் நின்றவனிடம்
தயக்கத்துடன் சிலநிமிட
சிரிப்புகளோடு சென்றுவிட்டாய்!!!!


பலமுறை இடைவெளி ஏற்பட்டும்
பலமான நம் நட்பு
பலவற்றையும் கடந்து
பாதிஆயுள் வரை தொடர்ந்து
சிகரம்போல் சீராக நின்றுகொண்டிருக்கிறது
இன்னொரு பாதிஆயிளும்
இனிதே நம்நட்பு மலர
இறைவனை பிராத்திக்கிறேன் !!!

காதல்  

Posted by இலக்கியசெல்வன் in


சிரித்து சிரித்து பேசினேன்
சிங்காரமாய் ஆடை அணிந்தேன்
இறவில் தூக்கம் இழந்தேன்
பகலில் பசியும் மறந்தேன்
கைபேசியில் காலத்தை கழித்தேன்
காரணம் அவள் என்றேன்
கடைசியில் தோல்வி என்று
உணராதவனாய்!!!!!!

விடுதலை தாராயோ  

Posted by இலக்கியசெல்வன் in


அனைவரும் உன்னை வெறுப்பதால்
அனைத்தையும் ஏற்கும்
அன்புள்ளம் கொண்டவனிடம்
அடைக்கலம் ஆகிவிட்டயோ???
அவன் எதையும் தாங்குவான்
அதை அறிந்தும் ஏன்
அவனை இன்னும் அவஸ்தைபடுத்துகிறாய்
சனி பகவானே!!!!!!!!

திருவிழா தேவதை  

Posted by இலக்கியசெல்வன் in


உன்னை பார்த்த நாள் முதல்

என் பேனா என்னிடம் கெஞ்சுகிறது

சில நிமிடங்களாவது

எனக்கு ஓய்வுதா என்று

Slam Book  

Posted by இலக்கியசெல்வன் in

மனதில் நீ

மறைத்து வைத்தவை
மறக்காமல் உன் மனதில் நின்றவை
நான் மாற்ற வேண்டியவை
மாற்றி கொண்டவை
முழுமையான முகவரி
மண்ணில் நீ தோன்றியநாள்
முடிந்தால் மின்னஞ்சல் முகவரி
முடிந்தவரை தமிழில்
மறக்காமல் இவை அனைத்தும்
மையிடு எனது இந்த
மதிற்பிற்க்குரிய பொன்ஏட்டில்

ஏமாற்றம்  

Posted by இலக்கியசெல்வன் in


அழகை கண்டு
ஆசை படாதே
அதை நினைத்து பிறகு
அவஸ்தை படுவாய் நீ....

ஒழியாதோ இவ்வகை (திரு)மன(ண) ங்கள்???  

Posted by இலக்கியசெல்வன் in


பாரத்தை குறைப்பதாக எண்ணி
பாடி திறிந்த சிறுமியின்
படிப்பை பாதியில் நிறுத்தி
மணவறை அறியா மங்கையை
மாலையிட்டு அனுப்பி வைத்தோர்
மௌனமாக நின்றனர் பெருந்துயரத்தில்:(
மடியில் ஓர் குழந்தையுடன்
மாங்கல்யம் அற்று பாரமாய்
வந்து நின்ற மகளை கண்டு!!!!!!!!

பாசம்  

Posted by இலக்கியசெல்வன் in


பதிநான்காண்டு வனவாசம், ஸ்ரீ இராமன்
தன் தந்தை சொல்லுக்காக
பதினெட்டாண்டு வெளிதேசம், தந்தை
இந்த செல்ல பிள்ளைகளுக்காக!!!

பதிலை தேடி  

Posted by இலக்கியசெல்வன் in


உன் வார்த்தைகளுக்காக என் செவியும்
உன் வருகைக்காக என் விழியும்
உறங்காமல் காத்திருக்கும்
உன் பதிலை தேடி ???

முதல் கடிதம்  

Posted by இலக்கியசெல்வன் in

முகவரி கேட்கும் பொழுது
முகம் மலர்ந்து சொன்னாய்
மறக்காமல் போன் செய்வேனென்று
மறந்ததை நினைவு கொள்ள
இதோ மடல் எழுதுகிறேன்.

வாழ்க பல்லாண்டு  

Posted by இலக்கியசெல்வன் in


எல்லோரிடத்தும் ஒன்றுபோல் பழகி
எல்லையட்ற்ற மனதை கவர்ந்தவளே
சினத்தை சிறிது குறைத்து
சீறும் சிறப்புடன் வாழ
சிநேகிதனின் நல்வாழ்த்துகள்......

உண்மையைதான் சொல்கிறேன் .....  

Posted by இலக்கியசெல்வன் in


வியந்துவிட்டேன் நான்

உன்னை தாவணியில் கண்டவுடன்

விழுந்துவிட்டேன் நான்

உன் தாழ்வான புன்னகையினால்!!!!!!

எய்ட்ஸ்  

Posted by இலக்கியசெல்வன் in



தெரியாமல் போனது நீ வந்தது
தெரிந்தே செய்த தவறுகளால்:(

மௌன வேதனை  

Posted by இலக்கியசெல்வன் in



மறுத்தால் கூட
மறக்க முயற்சிப்பேன்
மறைத்தால் மறுக்குதடி மனம்
மற்றொருவளை நினைக்க !

எனது கல்லுரி  

Posted by இலக்கியசெல்வன் in


எதிர்பார்ப்பின்றி வந்தேன்
என் தாய்தந்தையை பிரிந்து
எத்தனையோ கற்றேன்
எண்ணற்ற நண்பர்களிடமிருந்து
எல்லையின்றி மகிழ்ந்தேன்
எதிரிலுள்ள மைதானத்தில்
எதிர்பார்புடன் செல்கிறேன்
என்றாவது சாதிப்பேன் என்று !!!