பட்டணம் ..............
என் படிப்பை வளரவைத்தது
தகுதியை வளர்க்க உதவியது
தரமான வேலைவாய்ப்பையும்
அமைத்து கொடுத்தது..
பத்தாண்டுகளில் உன்னின்
பலமுகத்தை பழக்கிக்கொண்டவன்
பட்டணத்துப்பெண்ணே .........
உன்அன்பினை மட்டும்
ஏற்க்க மறுக்கிறது மனம்..
தோழனாய் தோளுயர்ந்து
நிற்கின்றவன்....
காதலனாய் கரைந்துவிடுகிறேன்
மங்கையர்யெனில் மாறாத
குணநலன்கள் இவையென்று
பசுமரத்தானிபோல் பதிந்துவிட்டது.
அறிவுக்கு எட்டுகிறது
இந்தஉலகமாற்றம்
அதை உணர மறுக்கிறது
என் பிற்போக்கான மனம்,,
பிற்போக்கான சிந்தனை
என்னில் மட்டுமல்ல
என் சமுதாயத்திலும்..பரவிகிடக்கிறது
மாறும் நம்வருங்காலம்
என்றநம்பிக்கையில் ...
மாறமுயற்சிக்கிறேன்.

எதிரொளியை தவிர
எதையும் காணமுடியவில்லை
எதிர்வீட்டு வாசலில்
தன்செந்கதிரால் பொலிவுட்ற்ற
மஞ்சள்புசிய அவள்திருமுகத்தை
மற்றவர்காண மறைக்கிறான்
காலைக்க்கதிரவன் !!!!!
உலராத கூந்தளுடன்
மஞ்சள் தாவணியில்
வாசலை வண்ணபடுத்த
வருபவளைக்காண போட்டி
எனக்கும் கதிரவனுக்கும்
விடிவதறக்குமுன் விழிக்கிறேன்
தினமும் .................
விந்தையை காண!!!!!!!
பொழுதெல்லாம் பேசுவதாலோ
ஒன்றாக சுற்றுவதாலோ
உதவிகள் பல புரிவதாலோ
உண்மையான அன்பு பிறப்பதில்லை...
...நட்பானாலும் காதலானாலும்
எண்ணங்கள் இணையும்போது மட்டுமே
இதயங்கள் இணையும் அவ்விடத்தில்
உண்மையான அன்பு பிறக்கும்
அது நிலைக்கும்.!!!!!
மறுக்கமுடியவில்லையடி ....
மனதில் ஓர் தடுமாற்றம்
மாற்றான் தோளில்
உன்தலை சாய்ந்தது கண்டு !!!!!!
அருகில் இருந்தவரை
அறியவில்லை..........
விலகிசென்றவுடன் என்னுள்
சில மாற்றங்கள்
அன்பை அபகரிக்க
அவன் வந்துவிட்டானோ என்று??????
மங்கையர் கண்ணீரால்
மனம் இளகி
மனமில்லாமல்.....
மனம்ஒத்து பிரிகிறோம்
என்கிறது அவன்மனம்
இழிவுகள் பலதாங்கியும்
பழிச்சொல் சுமத்தியதில்லை
அந்த மனம்
கரைப்பார் கரைத்தால்
கல்லும் கரையும்
பெற்றவர்கள் மனம்மட்டும்
விதிவிளக்கோ????
முயற்சிகளே சிறிதும்
எடுக்காமல் ....
முடியாது அவர்களைமாற்ற
என்றுஎண்ணி மூவரின்
வாழ்வில் விளையாட
எண்ணுகிறது அவள்மனம்
ஆழமான அன்பினை
ஆடைபோல்........
மாற்றி செலுத்தவல்லது
அந்த மனம்.
புதுபுது தகவல்தொடர்பு சாதனங்கள்
எத்தனை மணித்துளிகள் பேசினாலும்
என்னுள் ஏதோ குறை
எதையோ இழப்பது போல :(
கனவில் வந்து கன்னத்தில்
கொடுத்தாலும் ........... :)
உன் கடிதம் காணும்வரை
கலங்கியே நின்றன என்கண்கள்
உன் பிரிவினால்!!!!!!!
மழையில் நனைந்தபோது
மற்றவர்கள் பலர்நனைய
குடைக்குள்எனக்கு இடமளித்தவளே!!!
உணவு இடைவேளையில்
ஓயாத வேலையினால்
உணவை மறந்தபோது
பாதிவுணவளித்து பசியாற்றியவளே!!!!!
கல்லூரிக் கட்டணத்திற்காக
கால்கடுக்க நெடுவரிசையில்
நீண்டநேரம் நின்றபோது
குறிகிய பெண்வரிசையில்நின்று
கட்டணம் செலுத்துதவியவளே!!!!
பருவ தேர்வில்
திருதிருவென முழித்தபோது
தெளிவான உன்தாள் தெரிய
தோள் அசைத்து உதவியவளே!!!
வினையாமல் இவைஅனைத்தும்
இயல்பான வாழ்வில்
இன்றியமையாதவை
காரணங்கள் கண்டறிய
காலங்கள் பல காத்திருக்கிறேன்.
பிரிவினைகூட ஏற்றுகொள்கிறேன் தண்டனையாக
மன்னித்துவிட்டாய் என்று மறைத்துவிடாதே
உன் மனதிற்க்குள்..........................
நான்செய்ததாக சொன்ன பிழையை!
என்று அசைத்த
உன் விழிகளுக்காக
இன்றுவரை என்கண்கள்
உன்முகம் தேடுகிறது
இனிஅந்த அசைவுகள்
தொடராதோவென்று!!!!

அறியாத வயதில்
ஆறாம் வகுப்பில்
அழியாது தோன்றிய
ஆழமான அன்பே!
முதலில் தோன்றிய
முறியாத நட்பே!
சந்திக்க முடியாதென்று
சங்கடத்துடன் பிரிந்தோம்
அன்று பத்தாம்வகுப்பில்..
சகதியில் சிக்கிய பேருந்தில்
சாலை ஓரம் சென்றபோது
சிலநொடி வார்த்தைகளோடு
சிறகடித்து பறந்துவிட்டாய்!
சந்தர்ப்பங்கள் கிடைக்காதோவென்று
தவித்து கொண்டிருந்த நேரத்தில்
தெளிவான உன்முகம்
தெரிந்ததோர் புகைபடத்தில்
எல்லையற்ற மகிழ்ச்சியோடு
எல்லாவற்றையும் அறிந்துகொண்டேன்
உன் பள்ளி சிநேகிதநிடமிருந்து.
தொடர்புகொள்ள கிடைத்த
உன் தோழியின்...
தொலைபேசி எண்ணை
தொடர்ந்து முயற்சித்து................
மகளிர் விடுதியில் மங்கையர்கள்
மறைமுகமாக பயன்படுத்திய கைபேசியை
முப்பது நாட்களுக்கு பிறகு
முறையாக தொடர்புகொண்டு
மாறாத அந்த மழலைதன குரலை
மணிக்கணக்கில் மகிழ்ச்சியோடு ரசித்தேன்!
முக்கியமான அந்த கல்லூரிபருவத்தில்
முழுமையான உன் அன்பு
முறையாக என்னை வழிநடத்தி
முடிவில் தொலைந்து விட்டாய் !
ஏழாண்டுகளுக்கு பிறகு
எதிர்பாராமல் உன்முகத்தை
எதிரே கண்டபோது
கனவோ என்றுநினைத்து
கண்டுகொள்ளாமல் சென்றபோது
கைதட்டி அழைத்தகுரல்
கனவில்லை என்றுணர்த்தி
மகிழ்ச்சியில் மௌனமாய்
திகைத்துபோய் நின்றவனிடம்
தயக்கத்துடன் சிலநிமிட
சிரிப்புகளோடு சென்றுவிட்டாய்!!!!
பலமுறை இடைவெளி ஏற்பட்டும்
பலமான நம் நட்பு
பலவற்றையும் கடந்து
பாதிஆயுள் வரை தொடர்ந்து
சிகரம்போல் சீராக நின்றுகொண்டிருக்கிறது
இன்னொரு பாதிஆயிளும்
இனிதே நம்நட்பு மலர
இறைவனை பிராத்திக்கிறேன் !!!
அனைத்தையும் ஏற்கும்
அன்புள்ளம் கொண்டவனிடம்
அடைக்கலம் ஆகிவிட்டயோ???
அவன் எதையும் தாங்குவான்
அதை அறிந்தும் ஏன்
அவனை இன்னும் அவஸ்தைபடுத்துகிறாய்
சனி பகவானே!!!!!!!!
தன் தந்தை சொல்லுக்காக
பதினெட்டாண்டு வெளிதேசம், தந்தை
இந்த செல்ல பிள்ளைகளுக்காக!!!





















