பட்டணத்து பெண்ணே!!!!  

Posted by இலக்கியசெல்வன்

பட்டணம் ..............
என் படிப்பை வளரவைத்தது
தகுதியை வளர்க்க உதவியது
தரமான வேலைவாய்ப்பையும்
அமைத்து கொடுத்தது..

பத்தாண்டுகளில் உன்னின்
பலமுகத்தை பழக்கிக்கொண்டவன்
பட்டணத்துப்பெண்ணே .........
உன்அன்பினை மட்டும்
ஏற்க்க மறுக்கிறது மனம்..

தோழனாய் தோளுயர்ந்து
நிற்கின்றவன்....
காதலனாய் கரைந்துவிடுகிறேன்

மங்கையர்யெனில் மாறாத
குணநலன்கள் இவையென்று
பசுமரத்தானிபோல் பதிந்துவிட்டது.
அறிவுக்கு எட்டுகிறது
இந்தஉலகமாற்றம்
அதை உணர மறுக்கிறது
என் பிற்போக்கான மனம்,,

பிற்போக்கான சிந்தனை
என்னில் மட்டுமல்ல
என் சமுதாயத்திலும்..பரவிகிடக்கிறது
மாறும் நம்வருங்காலம்
என்றநம்பிக்கையில் ...
மாறமுயற்சிக்கிறேன்.

This entry was posted on Tuesday, January 17, 2012 at Tuesday, January 17, 2012 . You can follow any responses to this entry through the comments feed .

1 comments

Gud change...hope t continues in al men...atleas atha open ah othukitathuku hats off

March 1, 2012 9:25 PM

Post a Comment

Post a Comment