Tuesday, September 11, 2012


மொட்டை மாடியில் 
நிலவின் ஒளியில் 
தென்றலின் தாலாட்டில் 
சுகமான துயிலை 
சுத்தமாகவே இழந்தேன்!

வேளைக்கு வேளை
உண்ட உணவு 
வேலையாகவே மாறிவிட்டது !

காதலியுடன் கழிக்கவேண்டிய 
பொன்னான பொழுதுகளை 
கணினியுடன் கழித்துக்கொண்டிருக்கிறேன் !

உடனிருந்து உற்சாகத்துடன் 
உரிமையோடு கொண்டாடவேண்டிய 
தோழர்களின் திருமணங்கள் 
தொலைபேசி வாழ்த்துகளோடு 
தொடர்ந்து கொண்டிருக்கிறது!!!

தழுவி அணைக்கவேண்டிய 
தங்கைமகனை ......தாய்மாமன் 
Skypeல் மட்டுமே 
கொஞ்சமுடிகிறது .. 

வேகமான இந்த 
வாழ்க்கை ஓட்டத்தில் 
மிஞ்சியது ....
வெறுமையான நினவுகள்மட்டுமே !!!!

1 comment: