Monday, November 12, 2012

நீளம் ?? .. சேண்டி ???.. திவ்யா ?? .. திரிஷா ????


மீள முடியவில்லை
மிகபெரும் சேதத்திலிருந்து!

எச்சரிக்கை பலவிருந்தும்
எதிர்கொள்ள இயலவில்லை!

புயலுக்கு பின் அமைதி
வேடிக்கை .....விசித்திரம் ..

இந்த புயலுக்குபின்
எனக்கில்லை நிம்மதி!

Tuesday, September 11, 2012


மொட்டை மாடியில் 
நிலவின் ஒளியில் 
தென்றலின் தாலாட்டில் 
சுகமான துயிலை 
சுத்தமாகவே இழந்தேன்!

வேளைக்கு வேளை
உண்ட உணவு 
வேலையாகவே மாறிவிட்டது !

காதலியுடன் கழிக்கவேண்டிய 
பொன்னான பொழுதுகளை 
கணினியுடன் கழித்துக்கொண்டிருக்கிறேன் !

உடனிருந்து உற்சாகத்துடன் 
உரிமையோடு கொண்டாடவேண்டிய 
தோழர்களின் திருமணங்கள் 
தொலைபேசி வாழ்த்துகளோடு 
தொடர்ந்து கொண்டிருக்கிறது!!!

தழுவி அணைக்கவேண்டிய 
தங்கைமகனை ......தாய்மாமன் 
Skypeல் மட்டுமே 
கொஞ்சமுடிகிறது .. 

வேகமான இந்த 
வாழ்க்கை ஓட்டத்தில் 
மிஞ்சியது ....
வெறுமையான நினவுகள்மட்டுமே !!!!

Tuesday, July 17, 2012

முற்றுப்புள்ளி!

ஆரம்பத்திலே அறிந்தது
என்றோ ஒருநாள்
நம்நட்பிற்கு முற்றுப்புள்ளி
உண்டு என்று
சமுதாய சூழ்நிலைகளால் !

பலமுறை அந்தபுள்ளி
காற்புள்ளியாக (கமாவாக) மாறியது!

பிரச்சனை இல்லாத
பிரியாத நட்பென்று
புகழாரம் சூட்டினாய்
பூரிப்பு கொண்டாய் !

உன்குழப்பமான முடிவுகள்
பலவற்றிருக்கு ஆலோசகனானேன்
உணர்ச்சிகளை பகிர்ந்துகொள்ள
முதன்மையானவனேன்....
என்பெயர் அறியாது
உன்னருகில் எவருமில்லை.

சபலங்கள் சிலவற்றால்
தடுமாறிய போது
தவறென்று உணர்த்தி
துணைநிற்பாய் என்றெண்ணினேன்!

மாறாக மாற்றான்போல்
தண்டித்துவிட்டாய்
முடிவுக்கு வந்துவிட்டது
முற்றுப்புள்ளியாக அந்த காற்புள்ளி,,,,,.

Tuesday, June 19, 2012

தடுமாற்றம் !!!




மண்ணித்துவிடு என்றேன்
மறந்துவிடு என்றாய்!

புரிந்துகொள் என்றேன்
பிரிந்துவிடு என்றாய்!

பின்தொடர்ந்தேன் ...
பிடிவாதம் கொள்கிறாய் !

இயல்பான நிகழ்வு என்றேன்
ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாய்!

விரும்புகிறேன் என்றேன்
வெறுக்கிறேன் என்றாய்!

இந்த எதிர்மறை பதில்

தோழன் என்றாய்
காதலி என்றதிலிருந்து!

Monday, June 11, 2012

என் தேவதை !!

சித்திரை வெயில்
ஜில்லென்ற காற்று
தென்னந்தோப்பில்
தனிமையில் நான்!!

ஏரிகரையில்
எண்ணற்ற வண்ணகள்
வானவில்லின் தோற்றமென
வியந்துநின்று காணயில்
வண்ணங்கள் பல
என்னை நோக்கி !!


வெள்ளை தாவணி
பச்சைநிற பாவாடை
மஞ்சள் ரவிக்கை
உலராத கூந்தலில்
ஓராயிரம் மல்லிகை
மஞ்சள்பூசிய முகத்தில்
மத்தியில் செந்சாந்திட்டு
மங்கை அவள்
விழைகிறாள்
மன்னனை காண !!!!

Sunday, May 6, 2012

தோழியே !!!
வளர்பிறையை போல
நாளும் வளர்ந்தது
நம்நட்பு .....
பல புரிதல்களோடு !

அது பௌர்ணமியாய்
ஒளிரநினைத்த போது
தேய்பிறையின்றி அம்மவாசையானது
நம் பிரிதலோடு!

இருள்சூழ்ந்த என்வாழ்வில்
என்றும் நட்சதிரங்களாய்
ஜொலிக்கும் அந்த
பசுமையான நினைவுகள் !!!

Tuesday, January 17, 2012

பட்டணத்து பெண்ணே!!!!

பட்டணம் ..............
என் படிப்பை வளரவைத்தது
தகுதியை வளர்க்க உதவியது
தரமான வேலைவாய்ப்பையும்
அமைத்து கொடுத்தது..

பத்தாண்டுகளில் உன்னின்
பலமுகத்தை பழக்கிக்கொண்டவன்
பட்டணத்துப்பெண்ணே .........
உன்அன்பினை மட்டும்
ஏற்க்க மறுக்கிறது மனம்..

தோழனாய் தோளுயர்ந்து
நிற்கின்றவன்....
காதலனாய் கரைந்துவிடுகிறேன்

மங்கையர்யெனில் மாறாத
குணநலன்கள் இவையென்று
பசுமரத்தானிபோல் பதிந்துவிட்டது.
அறிவுக்கு எட்டுகிறது
இந்தஉலகமாற்றம்
அதை உணர மறுக்கிறது
என் பிற்போக்கான மனம்,,

பிற்போக்கான சிந்தனை
என்னில் மட்டுமல்ல
என் சமுதாயத்திலும்..பரவிகிடக்கிறது
மாறும் நம்வருங்காலம்
என்றநம்பிக்கையில் ...
மாறமுயற்சிக்கிறேன்.

Tuesday, February 22, 2011

விடியலின் விந்தை !!


எதிரொளியை தவிர
எதையும் காணமுடியவில்லை
எதிர்வீட்டு வாசலில்
தன்செந்கதிரால் பொலிவுட்ற்ற
மஞ்சள்புசிய அவள்திருமுகத்தை
மற்றவர்காண மறைக்கிறான்
காலைக்க்கதிரவன் !!!!!

உலராத கூந்தளுடன்
மஞ்சள் தாவணியில்
வாசலை வண்ணபடுத்த
வருபவளைக்காண போட்டி
எனக்கும் கதிரவனுக்கும்
விடிவதறக்குமுன் விழிக்கிறேன்
தினமும் .................
விந்தையை காண!!!!!!!

Sunday, December 12, 2010

பொழுதெல்லாம் பேசுவதாலோ
ஒன்றாக சுற்றுவதாலோ
உதவிகள் பல புரிவதாலோ
உண்மையான அன்பு பிறப்பதில்லை...

...நட்பானாலும் காதலானாலும்
எண்ணங்கள் இணையும்போது மட்டுமே
இதயங்கள் இணையும் அவ்விடத்தில்
உண்மையான அன்பு பிறக்கும்
அது நிலைக்கும்.!!!!!

Monday, August 2, 2010

இயல்பு ¡¡¡¡¡

மறுக்கமுடியவில்லையடி ....
மனதில் ஓர் தடுமாற்றம்
மாற்றான் தோளில்
உன்தலை சாய்ந்தது கண்டு !!!!!!

அருகில் இருந்தவரை
அறியவில்லை..........
விலகிசென்றவுடன் என்னுள்
சில மாற்றங்கள்
அன்பை அபகரிக்க
அவன் வந்துவிட்டானோ என்று??????

Wednesday, June 9, 2010

இளகிய மனம்??????

மங்கையர் கண்ணீரால்
மனம் இளகி
மனமில்லாமல்.....
மனம்ஒத்து பிரிகிறோம்
என்கிறது அவன்மனம்

இழிவுகள் பலதாங்கியும்
பழிச்சொல் சுமத்தியதில்லை
அந்த மனம்

கரைப்பார் கரைத்தால்
கல்லும் கரையும்
பெற்றவர்கள் மனம்மட்டும்
விதிவிளக்கோ????

முயற்சிகளே சிறிதும்
எடுக்காமல் ....
முடியாது அவர்களைமாற்ற
என்றுஎண்ணி மூவரின்
வாழ்வில் விளையாட
எண்ணுகிறது அவள்மனம்

ஆழமான அன்பினை
ஆடைபோல்........
மாற்றி செலுத்தவல்லது
அந்த மனம்.

Tuesday, May 25, 2010

தனிமை :(

பல்லாயிரம் மயில் தொலைவு
புதுபுது தகவல்தொடர்பு சாதனங்கள்
எத்தனை மணித்துளிகள் பேசினாலும்
என்னுள் ஏதோ குறை
எதையோ இழப்பது போல :(

கனவில் வந்து கன்னத்தில்
கொடுத்தாலும் ........... :)
உன் கடிதம் காணும்வரை
கலங்கியே நின்றன என்கண்கள்
உன் பிரிவினால்!!!!!!!

Saturday, May 15, 2010

தூதுபோ !!!

உன்அருமை தெரியாமல்
உன்னை குடைவைத்து
மறைப்பதை போல
என்காதல் புரியாது
என்னைஅவள் வெறுக்கிறாள் ....

உன்பெருமை சொல்லபலருண்டு
என்அருமை உணர்த்த
எவருண்டு????????

தூதுபோ மழையே
இந்த தூயவனின்
காதலை உணர்த்த
பதிலோடு வருவாய்என
பணிவோடு காத்திருக்கிறேன் .

Wednesday, March 24, 2010

மாட்டுப்பொங்கல்

பத்துமாதம் சுமந்துபெற்றவனோ
பாதியில் விட்டுவிட்டான்
பட்டினியாக நடுத்தெருவில்........
பகுத்தறிவற்ற அவைகளோ
பசியாற்றுகின்றன.......
இந்தமுதியவர்களுக்கு!!!

Sunday, March 21, 2010

பயணத்தின் பயன் :)

ஓடும்இரயிலில் ஒன்பதுமணிநேரம்
இருள்சூழ்ந்த இரயில்பெட்டியில்
பௌர்ணமியாய் ஒளித்திருந்த
உன்முகம் ரசித்ததிலிருந்து.....
உறங்காமல் பலஇரவுகள்
உன்நினைவால் வாடுகிறேன்

Sunday, March 14, 2010

மழையில் நனைந்தபோது
மற்றவர்கள் பலர்நனைய
குடைக்குள்எனக்கு இடமளித்தவளே!!!

உணவு இடைவேளையில்
ஓயாத வேலையினால்
உணவை மறந்தபோது
பாதிவுணவளித்து பசியாற்றியவளே!!!!!

கல்லூரிக் கட்டணத்திற்காக
கால்கடுக்க நெடுவரிசையில்
நீண்டநேரம் நின்றபோது
குறிகிய பெண்வரிசையில்நின்று
கட்டணம் செலுத்துதவியவளே!!!!

பருவ தேர்வில்
திருதிருவென முழித்தபோது
தெளிவான உன்தாள் தெரிய
தோள் அசைத்து உதவியவளே!!!

வினையாமல் இவைஅனைத்தும்
இயல்பான வாழ்வில்
இன்றியமையாதவை
காரணங்கள் கண்டறிய
காலங்கள் பல காத்திருக்கிறேன்.

Thursday, January 7, 2010


இழப்புக்கூட இனிமையானது
என்னவளிடம் என்னுடைய
இதயத்தை இழந்தபோது!!!!!

Saturday, December 5, 2009

தவறு அறியா தவிக்கிறேன்??????


பிழை அறியாமனம் பித்தாகிவிடும்
பிரிவினைகூட ஏற்றுகொள்கிறேன் தண்டனையாக
மன்னித்துவிட்டாய் என்று மறைத்துவிடாதே
உன் மனதிற்க்குள்..........................
நான்செய்ததாக சொன்ன பிழையை!

Sunday, November 15, 2009

ஒளிமயமான எதிர்காலம் ?????

ஆறுவயது சகோதரர்களின்
ஆக்ரோஷமான சண்டை
நடுத்தெருவில்
ஆசையுடன் அன்னை
அளித்த சிற்றுண்டிக்கல்ல
பொறுப்பற்ற தந்தை
போதையில் தொலைத்த
துண்டு பீடிக்கு!

Tuesday, September 29, 2009

மெய்பட காத்திருக்கிறேன்


உன்னோடுசென்ற உயர்தரசைவ உணவகம்
ஒன்றாக நாம்ரசித்த திரைப்படம்
நண்பர்களுக்கு பயந்துநழுவி சென்று
பார்த்த மருதமலைமுருகன் தரிசனம்
கூட்டமாக சென்று மகிழ்ந்த
உன் பிறந்தநாள் விருந்து............
நினைவாக்காமல் சென்ற
என் கனவை
என்று நிறைவேற்ற போகிறாய் ??

சிலநொடி வார்த்தைகளோடு :-)


அன்றொருநாள் சென்றுவருகிறேன்
என்று அசைத்த
உன் விழிகளுக்காக
இன்றுவரை என்கண்கள்
உன்முகம் தேடுகிறது
இனிஅந்த அசைவுகள்
தொடராதோவென்று!!!!

Saturday, September 12, 2009

திருமண அழைப்பிதழ்


நிமிடங்கள் சென்றன
வார்த்தைகள் நின்றன
கண்ணில் கண்ணீருடன்
மனதில் ஓர்பூகம்பம்...
மறைத்த காதலும்
மண்ணுக்குள் மறைந்தது
மணமக்களின் பெயர்கண்டு!!

Saturday, August 8, 2009

தோழியாய் என் சிநேகிதியாய்!!!


அறியாத வயதில்
ஆறாம் வகுப்பில்
அழியாது தோன்றிய
ஆழமான அன்பே!

முதலில் தோன்றிய
முறியாத நட்பே!
சந்திக்க முடியாதென்று
சங்கடத்துடன் பிரிந்தோம்
அன்று பத்தாம்வகுப்பில்..



சகதியில் சிக்கிய பேருந்தில்
சாலை ஓரம் சென்றபோது
சிலநொடி வார்த்தைகளோடு
சிறகடித்து பறந்துவிட்டாய்!

சந்தர்ப்பங்கள் கிடைக்காதோவென்று
தவித்து கொண்டிருந்த நேரத்தில்
தெளிவான உன்முகம்
தெரிந்ததோர் புகைபடத்தில்
எல்லையற்ற மகிழ்ச்சியோடு
எல்லாவற்றையும் அறிந்துகொண்டேன்
உன் பள்ளி சிநேகிதநிடமிருந்து.

தொடர்புகொள்ள கிடைத்த
உன் தோழியின்...
தொலைபேசி எண்ணை
தொடர்ந்து முயற்சித்து................

மகளிர் விடுதியில் மங்கையர்கள்
மறைமுகமாக பயன்படுத்திய கைபேசியை
முப்பது நாட்களுக்கு பிறகு
முறையாக தொடர்புகொண்டு
மாறாத அந்த மழலைதன குரலை
மணிக்கணக்கில் மகிழ்ச்சியோடு ரசித்தேன்!

முக்கியமான அந்த கல்லூரிபருவத்தில்
முழுமையான உன் அன்பு
முறையாக என்னை வழிநடத்தி
முடிவில் தொலைந்து விட்டாய் !

ஏழாண்டுகளுக்கு பிறகு
எதிர்பாராமல் உன்முகத்தை
எதிரே கண்டபோது
கனவோ என்றுநினைத்து
கண்டுகொள்ளாமல் சென்றபோது
கைதட்டி அழைத்தகுரல்
கனவில்லை என்றுணர்த்தி
மகிழ்ச்சியில் மௌனமாய்
திகைத்துபோய் நின்றவனிடம்
தயக்கத்துடன் சிலநிமிட
சிரிப்புகளோடு சென்றுவிட்டாய்!!!!


பலமுறை இடைவெளி ஏற்பட்டும்
பலமான நம் நட்பு
பலவற்றையும் கடந்து
பாதிஆயுள் வரை தொடர்ந்து
சிகரம்போல் சீராக நின்றுகொண்டிருக்கிறது
இன்னொரு பாதிஆயிளும்
இனிதே நம்நட்பு மலர
இறைவனை பிராத்திக்கிறேன் !!!

Saturday, August 1, 2009

காதல்


சிரித்து சிரித்து பேசினேன்
சிங்காரமாய் ஆடை அணிந்தேன்
இறவில் தூக்கம் இழந்தேன்
பகலில் பசியும் மறந்தேன்
கைபேசியில் காலத்தை கழித்தேன்
காரணம் அவள் என்றேன்
கடைசியில் தோல்வி என்று
உணராதவனாய்!!!!!!

Wednesday, May 20, 2009

விடுதலை தாராயோ


அனைவரும் உன்னை வெறுப்பதால்
அனைத்தையும் ஏற்கும்
அன்புள்ளம் கொண்டவனிடம்
அடைக்கலம் ஆகிவிட்டயோ???
அவன் எதையும் தாங்குவான்
அதை அறிந்தும் ஏன்
அவனை இன்னும் அவஸ்தைபடுத்துகிறாய்
சனி பகவானே!!!!!!!!

Sunday, May 10, 2009

திருவிழா தேவதை


உன்னை பார்த்த நாள் முதல்

என் பேனா என்னிடம் கெஞ்சுகிறது

சில நிமிடங்களாவது

எனக்கு ஓய்வுதா என்று

Slam Book

மனதில் நீ
மறைத்து வைத்தவை
மறக்காமல் உன் மனதில் நின்றவை
நான் மாற்ற வேண்டியவை
மாற்றி கொண்டவை
முழுமையான முகவரி
மண்ணில் நீ தோன்றியநாள்
முடிந்தால் மின்னஞ்சல் முகவரி
முடிந்தவரை தமிழில்
மறக்காமல் இவை அனைத்தும்
மையிடு எனது இந்த
மதிற்பிற்க்குரிய பொன்ஏட்டில்

Thursday, April 23, 2009

ஏமாற்றம்


அழகை கண்டு
ஆசை படாதே
அதை நினைத்து பிறகு
அவஸ்தை படுவாய் நீ....

ஒழியாதோ இவ்வகை (திரு)மன(ண) ங்கள்???


பாரத்தை குறைப்பதாக எண்ணி
பாடி திறிந்த சிறுமியின்
படிப்பை பாதியில் நிறுத்தி
மணவறை அறியா மங்கையை
மாலையிட்டு அனுப்பி வைத்தோர்
மௌனமாக நின்றனர் பெருந்துயரத்தில்:(
மடியில் ஓர் குழந்தையுடன்
மாங்கல்யம் அற்று பாரமாய்
வந்து நின்ற மகளை கண்டு!!!!!!!!

Tuesday, April 21, 2009

பாசம்


பதிநான்காண்டு வனவாசம், ஸ்ரீ இராமன்
தன் தந்தை சொல்லுக்காக
பதினெட்டாண்டு வெளிதேசம், தந்தை
இந்த செல்ல பிள்ளைகளுக்காக!!!

பதிலை தேடி


உன் வார்த்தைகளுக்காக என் செவியும்
உன் வருகைக்காக என் விழியும்
உறங்காமல் காத்திருக்கும்
உன் பதிலை தேடி ???

முதல் கடிதம்

முகவரி கேட்கும் பொழுது
முகம் மலர்ந்து சொன்னாய்
மறக்காமல் போன் செய்வேனென்று
மறந்ததை நினைவு கொள்ள
இதோ மடல் எழுதுகிறேன்.

வாழ்க பல்லாண்டு


எல்லோரிடத்தும் ஒன்றுபோல் பழகி
எல்லையட்ற்ற மனதை கவர்ந்தவளே
சினத்தை சிறிது குறைத்து
சீறும் சிறப்புடன் வாழ
சிநேகிதனின் நல்வாழ்த்துகள்......

Sunday, April 19, 2009

உண்மையைதான் சொல்கிறேன் .....


வியந்துவிட்டேன் நான்

உன்னை தாவணியில் கண்டவுடன்

விழுந்துவிட்டேன் நான்

உன் தாழ்வான புன்னகையினால்!!!!!!

எய்ட்ஸ்



தெரியாமல் போனது நீ வந்தது
தெரிந்தே செய்த தவறுகளால்:(

மௌன வேதனை



மறுத்தால் கூட
மறக்க முயற்சிப்பேன்
மறைத்தால் மறுக்குதடி மனம்
மற்றொருவளை நினைக்க !

எனது கல்லுரி


எதிர்பார்ப்பின்றி வந்தேன்
என் தாய்தந்தையை பிரிந்து
எத்தனையோ கற்றேன்
எண்ணற்ற நண்பர்களிடமிருந்து
எல்லையின்றி மகிழ்ந்தேன்
எதிரிலுள்ள மைதானத்தில்
எதிர்பார்புடன் செல்கிறேன்
என்றாவது சாதிப்பேன் என்று !!!