Saturday, December 5, 2009

தவறு அறியா தவிக்கிறேன்??????


பிழை அறியாமனம் பித்தாகிவிடும்
பிரிவினைகூட ஏற்றுகொள்கிறேன் தண்டனையாக
மன்னித்துவிட்டாய் என்று மறைத்துவிடாதே
உன் மனதிற்க்குள்..........................
நான்செய்ததாக சொன்ன பிழையை!

Sunday, November 15, 2009

ஒளிமயமான எதிர்காலம் ?????

ஆறுவயது சகோதரர்களின்
ஆக்ரோஷமான சண்டை
நடுத்தெருவில்
ஆசையுடன் அன்னை
அளித்த சிற்றுண்டிக்கல்ல
பொறுப்பற்ற தந்தை
போதையில் தொலைத்த
துண்டு பீடிக்கு!

Tuesday, September 29, 2009

மெய்பட காத்திருக்கிறேன்


உன்னோடுசென்ற உயர்தரசைவ உணவகம்
ஒன்றாக நாம்ரசித்த திரைப்படம்
நண்பர்களுக்கு பயந்துநழுவி சென்று
பார்த்த மருதமலைமுருகன் தரிசனம்
கூட்டமாக சென்று மகிழ்ந்த
உன் பிறந்தநாள் விருந்து............
நினைவாக்காமல் சென்ற
என் கனவை
என்று நிறைவேற்ற போகிறாய் ??

சிலநொடி வார்த்தைகளோடு :-)


அன்றொருநாள் சென்றுவருகிறேன்
என்று அசைத்த
உன் விழிகளுக்காக
இன்றுவரை என்கண்கள்
உன்முகம் தேடுகிறது
இனிஅந்த அசைவுகள்
தொடராதோவென்று!!!!

Saturday, September 12, 2009

திருமண அழைப்பிதழ்


நிமிடங்கள் சென்றன
வார்த்தைகள் நின்றன
கண்ணில் கண்ணீருடன்
மனதில் ஓர்பூகம்பம்...
மறைத்த காதலும்
மண்ணுக்குள் மறைந்தது
மணமக்களின் பெயர்கண்டு!!

Saturday, August 8, 2009

தோழியாய் என் சிநேகிதியாய்!!!


அறியாத வயதில்
ஆறாம் வகுப்பில்
அழியாது தோன்றிய
ஆழமான அன்பே!

முதலில் தோன்றிய
முறியாத நட்பே!
சந்திக்க முடியாதென்று
சங்கடத்துடன் பிரிந்தோம்
அன்று பத்தாம்வகுப்பில்..



சகதியில் சிக்கிய பேருந்தில்
சாலை ஓரம் சென்றபோது
சிலநொடி வார்த்தைகளோடு
சிறகடித்து பறந்துவிட்டாய்!

சந்தர்ப்பங்கள் கிடைக்காதோவென்று
தவித்து கொண்டிருந்த நேரத்தில்
தெளிவான உன்முகம்
தெரிந்ததோர் புகைபடத்தில்
எல்லையற்ற மகிழ்ச்சியோடு
எல்லாவற்றையும் அறிந்துகொண்டேன்
உன் பள்ளி சிநேகிதநிடமிருந்து.

தொடர்புகொள்ள கிடைத்த
உன் தோழியின்...
தொலைபேசி எண்ணை
தொடர்ந்து முயற்சித்து................

மகளிர் விடுதியில் மங்கையர்கள்
மறைமுகமாக பயன்படுத்திய கைபேசியை
முப்பது நாட்களுக்கு பிறகு
முறையாக தொடர்புகொண்டு
மாறாத அந்த மழலைதன குரலை
மணிக்கணக்கில் மகிழ்ச்சியோடு ரசித்தேன்!

முக்கியமான அந்த கல்லூரிபருவத்தில்
முழுமையான உன் அன்பு
முறையாக என்னை வழிநடத்தி
முடிவில் தொலைந்து விட்டாய் !

ஏழாண்டுகளுக்கு பிறகு
எதிர்பாராமல் உன்முகத்தை
எதிரே கண்டபோது
கனவோ என்றுநினைத்து
கண்டுகொள்ளாமல் சென்றபோது
கைதட்டி அழைத்தகுரல்
கனவில்லை என்றுணர்த்தி
மகிழ்ச்சியில் மௌனமாய்
திகைத்துபோய் நின்றவனிடம்
தயக்கத்துடன் சிலநிமிட
சிரிப்புகளோடு சென்றுவிட்டாய்!!!!


பலமுறை இடைவெளி ஏற்பட்டும்
பலமான நம் நட்பு
பலவற்றையும் கடந்து
பாதிஆயுள் வரை தொடர்ந்து
சிகரம்போல் சீராக நின்றுகொண்டிருக்கிறது
இன்னொரு பாதிஆயிளும்
இனிதே நம்நட்பு மலர
இறைவனை பிராத்திக்கிறேன் !!!

Saturday, August 1, 2009

காதல்


சிரித்து சிரித்து பேசினேன்
சிங்காரமாய் ஆடை அணிந்தேன்
இறவில் தூக்கம் இழந்தேன்
பகலில் பசியும் மறந்தேன்
கைபேசியில் காலத்தை கழித்தேன்
காரணம் அவள் என்றேன்
கடைசியில் தோல்வி என்று
உணராதவனாய்!!!!!!

Wednesday, May 20, 2009

விடுதலை தாராயோ


அனைவரும் உன்னை வெறுப்பதால்
அனைத்தையும் ஏற்கும்
அன்புள்ளம் கொண்டவனிடம்
அடைக்கலம் ஆகிவிட்டயோ???
அவன் எதையும் தாங்குவான்
அதை அறிந்தும் ஏன்
அவனை இன்னும் அவஸ்தைபடுத்துகிறாய்
சனி பகவானே!!!!!!!!

Sunday, May 10, 2009

திருவிழா தேவதை


உன்னை பார்த்த நாள் முதல்

என் பேனா என்னிடம் கெஞ்சுகிறது

சில நிமிடங்களாவது

எனக்கு ஓய்வுதா என்று

Slam Book

மனதில் நீ
மறைத்து வைத்தவை
மறக்காமல் உன் மனதில் நின்றவை
நான் மாற்ற வேண்டியவை
மாற்றி கொண்டவை
முழுமையான முகவரி
மண்ணில் நீ தோன்றியநாள்
முடிந்தால் மின்னஞ்சல் முகவரி
முடிந்தவரை தமிழில்
மறக்காமல் இவை அனைத்தும்
மையிடு எனது இந்த
மதிற்பிற்க்குரிய பொன்ஏட்டில்

Thursday, April 23, 2009

ஏமாற்றம்


அழகை கண்டு
ஆசை படாதே
அதை நினைத்து பிறகு
அவஸ்தை படுவாய் நீ....

ஒழியாதோ இவ்வகை (திரு)மன(ண) ங்கள்???


பாரத்தை குறைப்பதாக எண்ணி
பாடி திறிந்த சிறுமியின்
படிப்பை பாதியில் நிறுத்தி
மணவறை அறியா மங்கையை
மாலையிட்டு அனுப்பி வைத்தோர்
மௌனமாக நின்றனர் பெருந்துயரத்தில்:(
மடியில் ஓர் குழந்தையுடன்
மாங்கல்யம் அற்று பாரமாய்
வந்து நின்ற மகளை கண்டு!!!!!!!!

Tuesday, April 21, 2009

பாசம்


பதிநான்காண்டு வனவாசம், ஸ்ரீ இராமன்
தன் தந்தை சொல்லுக்காக
பதினெட்டாண்டு வெளிதேசம், தந்தை
இந்த செல்ல பிள்ளைகளுக்காக!!!

பதிலை தேடி


உன் வார்த்தைகளுக்காக என் செவியும்
உன் வருகைக்காக என் விழியும்
உறங்காமல் காத்திருக்கும்
உன் பதிலை தேடி ???

முதல் கடிதம்

முகவரி கேட்கும் பொழுது
முகம் மலர்ந்து சொன்னாய்
மறக்காமல் போன் செய்வேனென்று
மறந்ததை நினைவு கொள்ள
இதோ மடல் எழுதுகிறேன்.

வாழ்க பல்லாண்டு


எல்லோரிடத்தும் ஒன்றுபோல் பழகி
எல்லையட்ற்ற மனதை கவர்ந்தவளே
சினத்தை சிறிது குறைத்து
சீறும் சிறப்புடன் வாழ
சிநேகிதனின் நல்வாழ்த்துகள்......

Sunday, April 19, 2009

உண்மையைதான் சொல்கிறேன் .....


வியந்துவிட்டேன் நான்

உன்னை தாவணியில் கண்டவுடன்

விழுந்துவிட்டேன் நான்

உன் தாழ்வான புன்னகையினால்!!!!!!

எய்ட்ஸ்



தெரியாமல் போனது நீ வந்தது
தெரிந்தே செய்த தவறுகளால்:(

மௌன வேதனை



மறுத்தால் கூட
மறக்க முயற்சிப்பேன்
மறைத்தால் மறுக்குதடி மனம்
மற்றொருவளை நினைக்க !

எனது கல்லுரி


எதிர்பார்ப்பின்றி வந்தேன்
என் தாய்தந்தையை பிரிந்து
எத்தனையோ கற்றேன்
எண்ணற்ற நண்பர்களிடமிருந்து
எல்லையின்றி மகிழ்ந்தேன்
எதிரிலுள்ள மைதானத்தில்
எதிர்பார்புடன் செல்கிறேன்
என்றாவது சாதிப்பேன் என்று !!!