Wednesday, June 9, 2010

இளகிய மனம்??????

மங்கையர் கண்ணீரால்
மனம் இளகி
மனமில்லாமல்.....
மனம்ஒத்து பிரிகிறோம்
என்கிறது அவன்மனம்

இழிவுகள் பலதாங்கியும்
பழிச்சொல் சுமத்தியதில்லை
அந்த மனம்

கரைப்பார் கரைத்தால்
கல்லும் கரையும்
பெற்றவர்கள் மனம்மட்டும்
விதிவிளக்கோ????

முயற்சிகளே சிறிதும்
எடுக்காமல் ....
முடியாது அவர்களைமாற்ற
என்றுஎண்ணி மூவரின்
வாழ்வில் விளையாட
எண்ணுகிறது அவள்மனம்

ஆழமான அன்பினை
ஆடைபோல்........
மாற்றி செலுத்தவல்லது
அந்த மனம்.

1 comment:

  1. Un kavidha ellathalium oru reality iruku da, Real life scenarios apadiye kavidhaya eluthara nee.

    ReplyDelete